BREAKING NEWS

இராமநாதபுரம் மாவட்டத்தில் தொடரும் சாலைகளின் அவல நிலை ஆரம்ப சுகாதார நிலையம் (மருத்துவமனை), பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் பெரும் அவதி மாவட்ட நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்கப்படுமா மக்கள் எதிர்பார்ப்பு.. 

இராமநாதபுரம் மாவட்டத்தில் தொடரும் சாலைகளின் அவல நிலை ஆரம்ப சுகாதார நிலையம் (மருத்துவமனை), பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் பெரும் அவதி மாவட்ட நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்கப்படுமா மக்கள் எதிர்பார்ப்பு.. 

 

இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஊராட்சி ஒன்றியம், மேலச்சிறுபோது மற்றும் எஸ்.குளம் கிராமத்தில் சுமார் 1500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் தினசரி இந்த சாலையில் தான் அபாயத்துடன் சென்று வருகின்றனர்.

 

 

இந்நிலையில் மேலச்சிறுபோது கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் (மருத்துவமனை) உள்ளதால், கீழச்சிறுபோது, கோகொண்டான். சடையனேரி, பனையடினேந்தல், பி.கீரந்தை, பன்னந்தை, புத்தேந்தல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு இந்த சாலை வழியாக தான் செல்ல வேண்டும். 

 

 

மருத்துவமனைக்கு முதுகுளத்தூர்-சிக்கல் சாலை சந்திப்பிலிருந்து பிரிந்து மேலச்சிறுபோது கிராமத்திற்கும், மருத்துவமனைக்கும் மக்கள் இந்த சாலை வழியாக தான் செல்லவேண்டும்.

 

மேலும் இந்த மருத்துவமனைக்கு நாள்தோறும் ஏராளமான கர்ப்பிணி பெண்கள், மாற்று திறனாளிகள், முதியோர்கள் வந்து செல்கின்றனர்.

 

 

 

எனவே இந்த சாலையை சீரமைக்க மற்றும் புதிய சாலை அமைக்க கிராம பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (1)
  • comment-avatar

    ஊரின் உள்ளே சாலை மிக மோசமாக இருப்பதால் வழக்கமாக வந்து செல்லும் பேருந்தும் உள்ளே வருவதில்லை .

  • Disqus ( )