இறைச்சிக் கடையில் வாங்கிய கோழிக்கறியில் புழுக்கள். கெட்டுப்போன கோழிக்கறியை விற்ற கடையின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆதிஸ்வரன். இவர் பெரியகுளம் தென்கரை மார்க்கெட்டில் உள்ள சுகுணா கோழிக்கறி விற்பனை கடையில் நேற்று மாலை கோழி இறைச்சி வாங்கி வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியில்வைத்தாகவும்,
இன்று காலை குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த கோழி இறைச்சியை எடுத்து மனைவி சமைத்து பள்ளிக்கு செல்லுகின்ற குழந்தைக்களும் உணவிற்காகவும் கொடுத்துவிட்டுள்ளார்.
இந்நிலையில் வெளியே சென்று வீடு திரும்பிய ஆதிஸ்வரன் என்பவருக்கு அவரது மனைவி உணவு பரிமாறிய போது சமைத்த கோழி இறைச்சி குழம்பில் புழுக்கள் செத்து மிதப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே பதறிப் போன ஆதிஸ்வரன் தான் குழந்தைகளுக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடும் என அசத்தில் பள்ளிக்கு சென்று குழந்தைகளுக்கு கொடுத்த மதிய உணவை திரும்ப பெற்றார்.
இதனைத் தொடர்ந்து கோழி கறி விற்பனை செய்த கடை உரிமையாளரிடம் உங்களிடம் வாங்கிச் சென்ற கோழிக்கறியில் புழுக்கள் இருப்பதாகவும், கெட்டுப்போன கோழிக்கறிகளை பெற்றுள்ளதாக கூறி வாக்குவாதத்தில் உறவினர்களுடன் சேர்ந்து ஈடுபட்டுள்ளார்.
பெரியகுளம் பகுதியில் செயல்பட்டு வரும் கோழிக்கறி இறைச்சி கடைகளில் சுகாதாரமற்ற முறையில் கெட்டுப்போன கோழிக்கறிகளை விற்பனை தொடர்ந்து செய்து வருவதாக குற்றம் சாட்டி உணவு பாதுகாப்பு துறையினர் கோழிக்கறி கடைகளை ஆய்வு செய்து ஒரு கெட்டுப்போன வழிகளை விற்பனை செய்பவர்களை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.