BREAKING NEWS

இலுப்பக்கோரை ஊராட்சியில் கிராமசபை பாபநாசம் எம்எல்ஏ எம் எச் ஜவாஹிருல்லா பங்கேற்பு

இலுப்பக்கோரை ஊராட்சியில் கிராமசபை பாபநாசம் எம்எல்ஏ எம் எச் ஜவாஹிருல்லா பங்கேற்பு

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் பாபநாசம் ஒன்றியம் இலுப்பக்கோரை ஊராட்சியில் காலை 11 மணிக்கு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவருமான பேராசிரியர் முனைவர் எம் எச் ஜவாஹிருல்லா அவர்கள் கலந்து கொண்டார்.

 

கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களிடம் சட்டமன்றத்தில் உறுப்பினர் கருத்துக்களையும், குறைகளையும் கேட்டறிந்தார். பொதுமக்கள் தெரிவித்த குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.பின்னர் ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் சால்வை அணிவித்தார்.

 

முன்னதாக ஊராட்சி மன்றத் தலைவர் ராஜ்குமார் அனைவரையும் வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், சுதா, திமுக பாபநாசம் தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர், துணைச் செயலாளர் கலியமூர்த்தி, மனிதநேய மக்கள் கட்சி தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் ஹிபாயத்துல்லா, தலைமை செயற்குழு உறுப்பினர் முஹம்மது ரிஃபாயி,

 

பாபநாசம் ஒன்றிய தலைவர் கலீல் ரஹ்மான், சுவாமிமலை பேரூர் தலைவர் புர்க்கான் அலி மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர், உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர், கிராம நிர்வாக அலுவலர், தூய்மை பணியாளர்கள், உள்ளூர் பிரமுகர்கள், தாய்மார்கள், அரசு அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS