BREAKING NEWS

இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள காவல் உதவி ஆய்வாளர் உபகரணங்கள் வழங்கல்.!

இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள காவல் உதவி ஆய்வாளர் உபகரணங்கள் வழங்கல்.!

அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் மாவட்டம் விருதம்பட்டு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆதர்ஷ் இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள பல்வேறு வகையான உபகரணங்கள் வழங்கினார்.

இதனால் விருதம்பட்டு மாரியம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ள அம்பேத்கர் மணமகிழ் மன்றம் மூலம் தட்டச்சு கருவி ஒன்று வைக்கப்பட்டு மாணவர்கள் தவறான வழிக்குச் செல்லாமல் இலவசமாக தட்டச்சு பயில்வதற்கும், விளையாட்டு வீரர்களாக மாறுவதற்கு கேரம் போர்டு,

 

செஸ் போர்டு போன்றவை இலவசமாக கொடுக்கப்பட்டு மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மதியம் பொதுமக்கள் பசியாற அவரது (ஆதர்ஷ்) கைகளாலேயே மதிய உணவு தவறாது வழங்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

CATEGORIES
TAGS