உடுமலைப்பேட்டை உலக சுகாதார தினத்தை முன்னிட்டு அரசினர் தொழிற்பயிற்சி விழிப்புணர்வு முகாம்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான மணிகண்டன் அவர்களின் வழிகாட்டுதலின் படி உலக சுகாதார தினத்தை முன்னிட்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஒரு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இதில் அரசு மருத்துவமனை யோகா மற்றும் இயற்கை மருத்துவர் திரு.ராகவேந்திர சாமி அவர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு சில வாழ்வியல் நெறி முறைகள் மற்றும் உடல்நலம் குறித்த விழிப்புணர்வை வழங்கினார்.
மேலும் நமது வட்ட சட்டப்பணிகள் குழு பட்டியல் வழக்கறிஞர்கள் சத்தியவாணி
தம்பிபிரபாகரன் மற்றும் உடுமலைப்பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய பயிற்சி ஆசிரியர் ரமேஷ் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் திரு.சண்முகம் ஆகியோர் மாணவ மாணவிகளும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
CATEGORIES திருப்பூர்
TAGS உடுமலைப்பேட்டைஉடுமலைப்பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்உலக சுகாதார தினம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருப்பூர் மாவட்டம்முக்கிய செய்திகள்