BREAKING NEWS

உடுமலைப்பேட்டை யில் ராகுல் காந்தி பதவி நீக்கத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம்.!

உடுமலைப்பேட்டை யில் ராகுல் காந்தி பதவி நீக்கத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம்.!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை ரயில் நிலையம் முன்பு ராகுல் காந்தியின் எம்.பி பதவியை பறித்த மத்திய அரசை கண்டித்து இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அநீதியானது என்றும்,

 

அதனை ராகுல் காந்தியை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்துள்ள மத்திய அரசின் சர்வாதிகார நடவடிக்கையை கண்டித்தும் இந்த நடவடிக்கைகள் கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்று போராட்டத்தில் எடுத்து உரைக்கப்பட்டது.

 

இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் மூர்த்தி மற்றும் உடுமலைப்பேட்டை நகர செயலாளர் தெய்வக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் நலவாரிய மாவட்ட செயலாளர் குணசேகரன், மற்றும் வைதேகி சுந்தர்ராஜ் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள்.

 

 

மாவட்டத் துணைச் செயலாளர் அப்பாஸ் ,தமிழர் பண்பாட்டு பேரவை இணைத்தலைவர், பால் நாராயணன், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மாநில பொது குழு உறுப்பினர்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சதீஷ் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS