BREAKING NEWS

உடுமலைப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் கோவில் தேர் திருவிழா; 5000க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம்..

உடுமலைப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் கோவில் தேர் திருவிழா; 5000க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம்..

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நிகழ்ச்சி கொடி ஏற்றத்துடன் கடந்த 10 நாட்களுக்கு மேலாக சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது.

 

 

இந்நிலையில் எப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தீர்த்த அபிஷேகங்கள் செய்து முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்து சாமி தரிசனம் செய்தனர் அதேபோல் மாவிளக்கு பூஜை உள்ளிட்டபல்வேறு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்று வந்தது ஸ்ரீ அருள்மிகு மாரியம்மன் சன்னிதானத்தில் நாள்தோறும் சிறப்பு அலங்கார பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற்றது.

 

 

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சிறப்பித்தனர் மேலும் சுவாமியின் திருக்கல்யாண உற்சவத்தில் போது இப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு சிறப்பான முறையில் தனியார் மண்டபத்தில் சுமார் 5000க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

 

 

இந்நிகழ்ச்சியை உடுமலைப்பேட்டை ஏரி பாளையம் பகுதி பி .எஸ். எம்.மஹால் உரிமையாளர்அரிமா பன்னீர்செல்வம் அவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு அன்னதான திட்டத்தை வழங்கினார்.

 

 

இவர்களுடன் உடுமலை ராயல்லயன்ஸ் கிளப் சார்பில் அந்த அமைப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர் மேலும் இந்து முன்னணி பொறுப்பாளர்கள் மற்றும் பல்வேறு தன்னார்வ நிறுவனங்கள் கலந்து கொண்டு அன்னதானத் திட்டத்தை பொதுமக்களுக்கு சிறப்பாக வழங்கி சாமி தரிசனம் செய்து சிறப்பாக நடைபெற்றனர்.

CATEGORIES
TAGS