BREAKING NEWS

உடுமலையில் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் 5000த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!!

உடுமலையில் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் 5000த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!!

திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு திருப்பூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ராதாகிருஷ்ணன் தலைமையில் மின் கட்டண உயர்வை கண்டித்தும் திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் இடப்பட்டது. மேலும் அதிமுக ஆட்சி காலத்தில் இருந்து விலையில்லா ஆடு மாடுகள் வழங்கும் திட்டம் ,இலவச மடிக்கணினி திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் ரத்து செய்யபட்டு உள்ளது என ஆர்ப்பாட்டத்தில் பேசினர்.

 

 

பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் ஆனந்தன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கரைபுதூர் நடராஜன், பரமசிவம், உடுமலை நகர செயலாளர் ஹக்கீம் , ஒன்றிய செயலாளர்கள் அன்பர்ராஜன், முருகேசன், பிரனேஷ், இளஞ்செழியன் ,சோமசுந்தரம் உட்பட 5000த்திற்கும மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )