BREAKING NEWS

உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி – அலங்காநல்லூரில் திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி – அலங்காநல்லூரில் திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

திமுக மாநில இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பதவியேற்றதையொட்டி அலங்காநல்லூர் ஒன்றிய திமுக சார்பில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

 

தமிழக அமைச்சரவை 2-வது முறையாக மாற்றப்படுகிறது. கவர்னர் மாளிகையில் இன்று காலை நடைபெறும் விழாவில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்றார். இதைத் தொடர்ந்து முதல் அறிவிப்பாக விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் ரூ.6 ஆயிரமாக உயர்த்தப்படும் என தனது முதல் உத்தரவை வெளியிட்டார்.

 

 

இதைதொடர்ந்து அலங்காநல்லூர் ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் தன்ராஜ் தலைமையில் நகர் செயலாளர் ரகுபதி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், ஒன்றிய சேர்மன் பஞ்சு, துணை சேர்மன் சங்கீதா மணிமாறன், இளைஞரணி அமைப்பாளர்கள் சந்தனகருப்பு, மருது ஆகியோர் முன்னிலையில் நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

 

இந்த நிகழ்ச்சியில் மாணவரணி பிரதாப், ஒன்றிய கவுன்சிலர்கள் சரவணன், வசந்தி கலைமாரண், தகவல் தொழில்நுட்ப அணி தவசதிஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள் செந்தில்குமார், பாலமுருகன், துணை தலைவர் அன்பு முத்து, ஒன்றிய அணி அமைப்பாளர்கள் கார்த்திக், அக்பர், நிர்வாகிகள் சுந்தர், ராஜேஷ், மதலையப்பன், பிரபு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )