உத்தமபாளையம் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டி பேரூராட்சியில் மந்தை அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை நடத்தினார்கள்.
பூஞ்சிட்டு, தேன்சிட்டு, கரிச்சான் சிட்டு, நடுமாடு என ஐந்து பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் மதுரை, தேனி, திண்டுக்கல் விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்து கொண்டது.
சீறிப் பாய்ந்து சென்று முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாட்டு வண்டி வீரர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் கேடயத்தை பரிசாக வழங்கினார்கள்.
சாலையின் இருபுறமும் கூடியிருந்த ஏராளமான பொதுமக்கள் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தி வெகு விமர்சையாக உத்தமபாளையம் பைபாஸ் சாலையில் போட்டியை நடத்தினார்கள்.
CATEGORIES தேனி
TAGS அனுமந்தன்பட்டி பேரூராட்சிஇரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தய போட்டிஉத்தமபாளையம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்தேனி மாவட்டம்மந்தை அம்மன் கோவில் திருவிழாமுக்கிய செய்திகள்