BREAKING NEWS

உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட இரண்டு லட்சத்தி 70 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்.

உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட இரண்டு லட்சத்தி 70 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்.

தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் தஞ்சாவூர் மாவட்டத்தில் 25 இடங்களில் வாகன சோதனை சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு வாகனங்கள் தீவிர சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் பறக்கு படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சரக்கு வாகனத்தில் வந்த பாலாஜி என்பவரிடம் இருந்து 2.70 பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விசாரணையில் கந்தர்வகோட்டை, கரம்பக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எண்ணெய் விற்பனை செய்து விட்டு வசூலான தொகையுடன் பாலாஜி வந்துள்ளார் என்பது தெரிய வந்தது. இருந்த போதிலும் 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், பறக்கும் படை அதிகாரி கூட்டுறவு சார்பதிவாளர் சித்திரவேல் தலைமையிலான அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து ஒரத்தநாடு தாசில்தார் சுந்தரச் செல்வியிடம் ஒப்படைத்தனர்.

Share this…

CATEGORIES
TAGS