உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
செங்கை ஷங்கர், செங்கல்பட்டு.
செங்கல்பட்டில் உலக எய்ட்ஸ் தின விழாவை முன்னிட்டு புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியின் தேசிய மாணவர் படையினர் எய்ட்ஸ் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்றனர்.
இந்நிகழ்வில் தேசிய மாணவர் படை அதிகாரிகள் காந்தி ராஜா, செங்கல்பட்டு நகர காவல்துறை உதவி ஆய்வாளர் டில்லிபாபு குமார், பர்கத் அலி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
ஊர்வலத்தை பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட்சகோதரர் பாலன் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வினை பள்ளியின் தேசிய மாணவர் படை அலுவலர்கள் சச்சிதானந்தம் மற்றும் செல்வம் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர்.
CATEGORIES செங்கல்பட்டு
TAGS உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணிகல்விசெங்கல்பட்டு மாவட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளிமுக்கிய செய்திகள்