உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு புத்தூர் பிரண்ட்லைன் மெடிக்கலில் இலவச சர்க்கரை நோய் மருத்துவ முகாம்.

திருச்சி, உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு திருச்சி புத்தூர் ப்ரண்ட்லைன் மெடிக்கல் அண்டு டயக்னோஸ்டிக்ஸ்சில் இலவச சர்க்கரை நோய் மருத்துவ முகாம் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
இந்த முகாமில் சர்க்கரை நோய் அறிகுறிகளானஅதிக தாகம் எடுத்தல், உடல் எடை குறைதல், தூக்கமின்மை, காயம் ஆறாமல் இருப்பது, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, தேவையற்ற படபடப்பு, பார்வை குறைபாடு, கை மற்றும் கால்களில் மதமதப்பு, எரிச்சல் உணர்வு போன்ற அறிகுறி உள்ள நோயாளிகளுக்கு,..
சர்க்கரை நோய் மற்றும் பொது மருத்துவர் ரினுசித்ரா ஆலோசனைகள் வழங்கினார். இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர் இதில் 27 பேர் மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர். முகாம் ஏற்பாடுகளை மக்கள் தொடர்பு அதிகாரிகள் அன்பு, ஸ்டீபன் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் செய்திருந்தனர்.