உலக மனித உரிமைகள் தினத்தை கொண்டாடும் விதமாக மாணவ மாணவிகளுக்கு மனித உரிமைகள் என்ற தலைப்பில் கட்டுரை போட்டி.

உலக மனித உரிமைகள் தினத்தை கொண்டாடும் விதமாக இன்று தஞ்சை வடக்கு மாவட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைகள் துறையின் மாநில தலைவர் புரட்சித் தோழர் திரு மகாத்மா ஸ்ரீனிவாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி காங்கிரஸ் மனித உரிமை துறையின் தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் திருமதி கராத்தே சுபா அவர்களின் தலைமையில் மாநில செயலாளர் திரு குட்டி சாமிநாதன் அவர்களின் முன்னிலையிலும் தாராசுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மனித உரிமைகள் என்ற தலைப்பில் கட்டுரை போட்டியும், கருத்தரங்கமும் நடைபெற்றது.
மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளான மரக்கன்றுகள், நோட்டு புத்தகங்கள், இணைப்புகளும் வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியரும், தமிழ் ஆசிரியரும் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
மேலும் தஞ்சை வடக்கு மாவட்ட மனித உரிமைகள் துறையில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசும் வழங்கப்பட்டது. மாவட்ட பொது செயலாளர் செல்லதுரை, மாவட்ட செயலாளர் கார்த்தி, மாவட்ட பொதுச் செயலாளர் ராஜேஷ், மாவட்டத் துணைத் தலைவர் திருச்சேறை முத்து, மாநகரத் தலைவர் சுஜித் தமிழ்ச்செல்வன், மாநகர செயலாளர் காவின், மாவட்ட செயலாளர் ரியாஸ் ஆகியோரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.