BREAKING NEWS

உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்,

உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்,

கர்நாடகா மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று அமோக வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை காங்கிரஸ் கட்சி மாவட்ட துணை தலைவர் முனைவர் சீனிவாசன் அவர்களின் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் மணிக்கூண்டில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்,

பேருந்து நிலையத்தில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது, அதைத் தொடர்ந்து கர்மவீரர் காமராஜர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வெற்றியை கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில் வட்டாரத் தலைவர் பெரியசாமி, ஷேக் ஷவாத், நகரத் தலைவர் நல்ல குழந்தைவேல், நாகலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் காளிராஜன், கிளியூர் ராமசாமி முன்னிலை வகித்தனர், வரவேற்புரை மீடியா முருகன் சேவாதளம் மாவட்ட தலைவர், மற்றும் கட்சி நிர்வாகிகள் ராமச்சந்திரன், விவசாய அணி பஞ்சநாதன், சிவநாதன், ரங்கசாமி, சேகர், விஜயகுமார், ராமசாமி, கூட்டணி கட்சி நிர்வாகிகள் விசிக, தொகுதி செயலாளர் சேரன், ஒன்றிய செயலாளர் பாலசிங்கம், தொகுதி அமைப்பாளர் சுரேஷ்குமார் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS