ஊதியம் வழங்காமல் காலம் தாழ்த்திவருவதால் தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் கல்வி மாவட்டம் நல்லூர் வட்டாரத்தில் வெங்கடேசன் பதிவரை எழுத்தராக பணிபுரிந்து தற்போது நிர்வாக பணி மாறுதலால் நல்லூர் வட்டாரத்தில் வெங்கடேசன் பதிவரை எழுத்தராக பணி புரிந்து வருகிறார்.
கடந்த 3 மாத காலமாக பணி செய்து வரும் வெங்கடேசனுக்கு அரசு வழங்க வேண்டிய மாத ஊதியத்தை வழங்காமல் காலம் தாழ்த்திவருவதால் குடும்பம் நடத்தவே சிரமப்பட்டு வருகிறேன் என்றும்,
நீரிழிவு நோயாளியால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் எங்களை பணி மாறுதல் செய்ததை மீண்டும் அதே இடத்தில் பணி அமர்த்த வேண்டும் எனவும் விருத்தாசலத்தில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்.
CATEGORIES கடலூர்
TAGS கடலூர் மாவட்டம்குற்றம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்நல்லூர் வட்டாரம்முக்கிய செய்திகள்விருத்தாசலம் கல்வி மாவட்டம்