BREAKING NEWS

ஊனமுற்றோருக்கான நிதி உதவி கிடைக்கும் வகையில் அடையாள அட்டை வழங்கப்பட்டது

ஊனமுற்றோருக்கான நிதி உதவி கிடைக்கும் வகையில் அடையாள அட்டை வழங்கப்பட்டது

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காந்தி நகரை சேர்ந்தவர் துரை.இவர் லோடு மிதிவண்டி ஓட்டும் தொழிலாளி.அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு நீண்ட நாட்களாக உடல்நலகுறைவால் பாதிக்கப்பட்டு உள்ளார்.இதனால் இவரது குடும்பம் வறுமையில் வாடிய நிலையில் உள்ளது.இது குறித்து தகவல் அறிந்த குத்தாலம் பேரூராட்சி தலைவர் சங்கீதா மாரியப்பன் அவருக்கு ஊனமுற்றோருக்கான நிதி உதவி கிடைக்கும் வகையில் அதற்கான அடையாள அட்டை கிடைக்க பரிந்துரை செய்து அதனை அவருக்கு வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவர் சம்சுதீன் மற்றும் ஐயப்பன்.சாந்தி சங்கர்.காந்திநகர் தெரு வாசிகள் உடன் இருந்தனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )