BREAKING NEWS

எடப்பாடியார் அதிமுக பொதுசெயலாளராக தேர்வு தூத்துக்குடியில் அதிமுகவினர் மாவட்ட செயலாளர் எஸ்பி சண்முகநாதன் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி மகிழ்ச்சி.

எடப்பாடியார் அதிமுக பொதுசெயலாளராக தேர்வு தூத்துக்குடியில் அதிமுகவினர் மாவட்ட செயலாளர் எஸ்பி சண்முகநாதன் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி மகிழ்ச்சி.

முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுசெயலாளராக தேர்வு தூத்துக்குடியில் அதிமுகவினர் தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்பி சண்முகநாதன் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

 

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒபிஎஸ் அணியினர் அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லாது என வழக்கு தொடரப்பட்டது.வழக்கு பரபரப்பாக நடைபெற்று வந்தது ….!!!

இதில் சென்னை உயர்நீதிமன்றம் நீதியரசர் இன்று 28-3-2023காலை 10.30மணியளவில் அதிரடி தீர்ப்பு வழங்கினார் .

இவ் வழக்கில் அதிமுக பொதுச் குழு தீர்மானம் செல்லும் என அறிவித்தது அத்துடன் ஒபிஎஸ் அணியினர் தொடுத்த வழக்கை தள்ளுபடியும் செய்தது.

 

 தீர்ப்பு வெளியான சற்று நேரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகள் தேர்தல் ஆணையர் கள் வெளியிடப்பட்டது

இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட்டார்.

 

எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச்செயலாளர் பொறுப்பு ஏற்றதும் அதிமுக தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சி வெள்ளம் பெருக்கெடுத்து கொண்டாடி வருகின்றனர்.

தமிழகமெங்கும் அதிமுகவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

தூத்துக்குடியில் அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்பி சண்முகநாதன் தலைமையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு லட்டு வழங்கி கொண்டாடினர்.

CATEGORIES
TAGS