எடப்பாடி பழனிச்சாமி 69 வது பிறந்தநாள் விழா ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வரும், தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமியின் 69-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பவானியில் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ் தலைமையில் இன்று காலை மற்றும் மதியம் புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் ஏழை, எளிய பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பவானி நகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பல்வேறு காய்கறிகள் அடங்கிய பை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பவானி நகராட்சி 12 வது வார்டு செயலாளர் மகாதேவன், மூன்றாவது வார்டு அதிமுக கவுன்சிலர் சிவக்குமார், 11-வது வார்டு செயலாளர் குணசேகரன், முன்னாள் கவுன்சிலர் ஏ.சி. முத்துசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
CATEGORIES அரசியல்
TAGS அதிமுகஅம்மா உணவகம்அரசியல்ஈரோடு புதிய பஸ் நிலையம்ஈரோடு மாவட்டம்எடப்பாடி கே பழனிச்சாமி 69 ஆவது பிறந்த நாள்எடப்பாடி கே.பழனிசாமிதமிழ்நாடுதலைப்பு செய்திகள்முக்கிய செய்திகள்