எட்டு நாட்களாக தேனி, கம்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் அச்சுறுத்தி வந்த அரிசி கொம்பன் யானை பிடிபட்டது.

கடந்த எட்டு நாட்களாக தேனி மாவட்டம் கம்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் வலம் வந்த அரிசி கொம்பன் யானை தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சின்ன ஓவுலாபுரம் என்ற ஊரில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெருமாள் கோவில் மலைப்பகுதியில் வலம் வருவதை அறிந்த வனத்துறையினர் நேற்று மாலை முதல் அதனை கண்காணித்து வந்த நிலையில்,
நள்ளிரவு இரண்டு மணி அளவில் கம்பத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த மூன்று கும்கி யாணைகளை பெருமாள் மலை பகுதிக்கு வனத்துறையினர் அழைத்து வந்து கும்கி யானையில் உதவியுடன் அரிக்கும் யானைக்கு மருத்துவர் மயக்க ஊசி செலுத்தி அதனை மயக்கம் அடைய செய்தனர்.
அதன் பின்னர் கும்கி யானைகள் மற்றும் ஜேசிபி இயந்திரத்தின் உதவிகளுடன் அரிக்கொம்பன் யானையை அதற்குரிய வாகனத்தில் ஏற்றி பலத்த பாதுகாப்புடன் தற்போது அந்தப் பகுதியில் இருந்து யானையை அழைத்து சென்றுள்ளனர்.
பிடிபட்ட அரிக் கொம்பன் யானையை தேனி மாவட்டத்தை ஒட்டியுள்ள வெள்ளிமலை பகுதியில் விடப்படும் என்றும், மேலும் அதன் உடம்பில் பல காயங்கள் இருப்பதால் முதுமலை வனப்பகுதிக்கு சென்று அங்கு சிகிச்சை அளித்த பின்பு காட்டுப்பகுதியில் விடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இதுவரை யானையை எந்த பகுதியில் கொண்டு விடப் போகிறார்கள் என்ற முழுமையான தகவல் தெரியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.