BREAKING NEWS

எஸ்.டி.டி.யூ (சோசியல் டெமாக்ரடிக் ட்ரேட் யூனியன்) மற்றும் ஹெல்பேஜ் இந்தியா இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ முகாம்.

எஸ்.டி.டி.யூ (சோசியல் டெமாக்ரடிக் ட்ரேட் யூனியன்) மற்றும் ஹெல்பேஜ் இந்தியா இணைந்து நடத்திய இலவச பொது  மருத்துவ முகாம்.

திருநெல்வேலி புறநகர் மாவட்ட எஸ்.டி.டி.யூ மற்றும் ஹெல்ப் பேஜ் இந்தியா சார்பில் வீரவநல்லூர் பஸ் நிலையம் அருகில் புறநகர் மாவட்ட செயலாளர் சாகுல் ஹமீது தலைமையில் இலவச பொது மருத்துவ முகாம் மற்றும் நலவாரிய அட்டை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

 

 

நிகழ்வினை வான்முகில் அறக்கட்டளை இயக்குனர் வழக்கறிஞர் பிரிட்டோ துவக்கி வைத்தார். நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் வர்த்தக அணி மாநில செயற்குழு உறுப்பினர் ஷேக்சாலி மற்றும் எஸ்.டி.டி.யூ நெல்லை மண்டல தலைவர் ஹைதர் அலி ஆகியோர் தொழிலாளர் நலவாரிய அட்டை வழங்கி சிறப்பித்தார்கள்.

 

 

எஸ்.டி.பி.ஐ கட்சியின் நெல்லை புறநகர் மாவட்ட தலைவர் பீர்மஸ்தான், எஸ்.டி.டி.யூ மாநகர் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஆரிப், விமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட பொதுச் செயலாளர் வீரை சாஜிதா, வீரவநல்லூர் பேரூராட்சி தலைவர் சித்ரா, பேரூராட்சி துணைத்தலைவர் வசந்த் சந்திரா,

 

 

எஸ்.டி.டி.யூ நெல்லை புறநகர் மாவட்ட துணைச் செயலாளர் ராஜேஷ் முத்து, வீரவநல்லூர் எஸ்.டி.பி.ஐ கட்சியின் நகர தலைவர் முகம்மது அசனார், வீரை ஓட்டுனர் சங்க தலைவர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்வில் தொழிலாளர்கள் மற்றும் எஸ்.டி.டி.யூ நிர்வாகிகள், பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டதோடு, தொழிலாளர் நலவாரிய அட்டை பெற்று பயனடைந்தனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )