BREAKING NEWS

ஏற்காடு படகு இல்லத்தில் படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்.

ஏற்காடு படகு இல்லத்தில் படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்.

அதிகாலை முதலில் ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்..

 

தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு விடுமுறை தினம் மற்றும் வாரத்தின் இறுதி நாட்களான சனி, ஞாயிற்று கிழமைகளில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருவது வழக்கம்.

 

 

கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், கடந்த ஒரு சில நாட்களாக மழை பெய்யவில்லை. விடுமுறை தினமான இன்று ஏற்கட்டிற்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்திருந்தனர்.

 

ஏற்காடு வந்த சுற்றுலா பயணிகள் ஏற்காடு அண்ணா பூங்கா ,லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஜா தோட்டம், பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் கோயில், கிளியூர் நீர்வீழ்ச்சி ஆகிய பகுதிகளுக்கு சென்று சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )