BREAKING NEWS

ஒசூரில் டைலர் கடையில் வைத்து ஒன்றிய அரசின் திட்டத்தின் கீழ் கடன் உதவி வாங்கி தருவதாக பொதுமக்களுக்கு டோக்கன் வினியோகம் செய்தவரின் கணிணி பறிமுதல்

ஒசூரில் டைலர் கடையில் வைத்து ஒன்றிய அரசின் திட்டத்தின் கீழ் கடன் உதவி வாங்கி தருவதாக பொதுமக்களுக்கு டோக்கன் வினியோகம் செய்தவரின் கணிணி பறிமுதல்

ஒசூரில் ஒன்றிய அரசின் திட்டத்தில் கடன் உதவி வாங்கி தருவதாக டோக்கன் வினியோகம், பெண்கள் குவிந்ததால் பரபரப்பு,தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கம்ப்யூட்டர்கள் பறிமுதல் நடவடிக்கை

ஒசூரில் டைலர் கடையில் வைத்து ஒன்றிய அரசின் திட்டத்தின் கீழ் கடன் உதவி வாங்கி தருவதாக பொதுமக்களுக்கு டோக்கன் வினியோகம் செய்தவரின் கணிணி பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் மக்களவை தேர்தல் நடத்தை விதிமுறையில் உள்ள நிலையில், பிரதமர் மோடி புகைப்படத்துடன் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் வரை கடன் பெற்று தருவதாக நோட்டீஸ் ஆங்காங்கே வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஓசூர் தாசில்தார் அலுவலகம் சாலையில் உள்ள சந்திரசூடேஸ்வரர் நகரில் உள்ள டைலர் கடையில், ராம்குமார், உமாமகேஸ்வரி ஆகிய இருவர்கள் ஒன்றிய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தில் ரூ 1 லட்சம் கடன்வாங்கி தருவதாக கூறியதால், அங்கு ஏராளமான பெண்கள் கடன் உதவிக்கு விண்ணப்பம் செய்ய திரண்டனர். பின்னர் அங்கு விண்ணப்பம் செய்ய ரூ.150 முதல் 200 வரை வசூல் செய்யப்பட்டது. பின்னர் அதற்கு உத்திரவாதமாக டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த தேர்தல் அலுவலர் பிரியங்கா ஆய்வு செய்தார், அப்போது எந்த ஒரு அனுமதியின்றியும் நன்றிய அரசின் திட்டத்தில் கடன் உதவி வாங்கி தருவாதாக பொதுமக்களுக்கு விண்ணப்பம் வழங்கியதாக, அங்கிருந்த டோக்கன்கள் மற்றும் கணிணிகளை பறிமுதல் செய்தார். மேலும் அங்கு தேர்தல் பறக்கும் படையினரை வரவழைத்து டோக்கன் வழங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்திரவிட்டார்.

இது குறித்து தேர்தல் அலுவலர் பிரியங்கா கூறும் போது,

CATEGORIES
TAGS