BREAKING NEWS

ஒசூர் மாநகராட்சி 44வது வார்டு கர்ணூர் பகுதியில் தார்சாலை அமைத்து கொடுத்த MLA, மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர் ஆகியோருக்கு குடியிருப்பு வாசிகள் நன்றி தெரிவித்தனர்.

ஒசூர் மாநகராட்சி 44வது வார்டு கர்ணூர் பகுதியில் தார்சாலை அமைத்து கொடுத்த MLA, மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர் ஆகியோருக்கு குடியிருப்பு வாசிகள் நன்றி தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி 44வது வார்டிற்குட்பட்ட பகுதிகளில் மாமன்ற உறுப்பினரும், திமுகவின் ஆதி திராவிடர் நலக்குழு மாவட்ட அமைப்பாளர் முனிராஜ் அவர்கள் ஒசூர் MLA பிரகாஷ் மற்றும் ஒசூர் மேயர் சத்யா ஆகியோரிடம் மனு அளித்து மேற்க்கொட்ட தொடர் முயற்சியால் பல்வேறு மக்கள் வளர்ச்சி திட்ட பணிகள் வார்டு முழுவதும் தடையின்றி நடைப்பெற்று வருகிறது.

 

இந்தநிலையில் கர்ணூர், மஞ்சுநாதா நகரில் தார்சாலைகளை அமைத்திட மாவட்ட செயலாளரும், ஓசூர் எம்எல்ஏவுமான Y.பிரகாஷ் அவர்களும், ஒசூர் மாநகர மேயர் S.A.சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா ஆகியோர் 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார்சாலைகளை அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை செய்து துவக்கி வைத்திருந்த நிலையில்

தற்போது நடைப்பெற்று வரும் தார்சாலை பணிகளை மாமன்ற உறுப்பினர் திரு.முனிராஜ் அவர்கள் நேரில் பார்வையிட்டு பணிகளை தரமாகவும், விரைந்து முடித்திட வலியுறுத்தினார்..

 

கர்ணூர் மற்றும் மஞ்சுநாதா நகர் ஆகிய பகுதி மக்களின் கோரிக்கைகளை ஏற்று தொடர் முயற்சி மேற்க்கொண்டு தார்சாலைகளை அமைக்க காரணமான மாமன்ற உறுப்பினர் மஞ்சுளா முனிராஜ் அவர்களுக்கு குடியிருப்பு வாசிகள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Share this…

CATEGORIES
TAGS