ஒட்டன்சத்திரம், தாராபுரம் சாலையில் பெண் தவறவிட்ட 5 பவுன் நகையை ஆட்டோ ஓட்டுனர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம்.

திண்டுக்கல் மாவட்டம்; ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தங்கச்சியம்மாபட்டி பகுதியைச் சேர்ந்த பிருந்தா இவர் இருசக்கர வாகனத்தில் கட்டைபையில் 5 பவுன் தங்க நகைகளை வைத்துக்கொண்டு தங்கச்சிஅம்மாபட்டி நோக்கி சென்று கொண்டிருந்தபோது ..
கையில் இருந்த பை தவறுதலாக கீழே விழுந்துள்ளது. பையை காணாமல் அதிர்ச்சி அடைந்த பிருந்தா இதுகுறித்து ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்தார். புகார் அளிக்க வந்த ஒரு சில நிமிடத்திற்குள் ஆட்டோ ஓட்டுனர் ஆறுமுகம்(60) என்பவர் பிருந்தா தவறவிட்ட நகையை எடுத்துக்கொண்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
நேர்மையாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுனருக்கு, DSP.முருகேசன் பொன்னாடை அணிவித்து அன்பளிப்பு வழங்கி பாராட்டினார்.
CATEGORIES திண்டுக்கல்
TAGS ஒட்டன்சத்திரம்ஒட்டன்சத்திரம் காவல் நிலையம்தங்கச்சியம்மாபட்டிதமிழ்நாடுதலைப்பு செய்திகள்திண்டுக்கல் மாவட்டம்பெண் தவறவிட்ட 5 பவுன் நகைபெண் தவறவிட்ட 5 பவுன் நகை ஆட்டோ ஓட்டுனர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்முக்கிய செய்திகள்