BREAKING NEWS

ஒரவந்தவாடி கிராமத்தில் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்.

ஒரவந்தவாடி கிராமத்தில் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் ஒரவந்தவாடி கிராமத்தில் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் புதுப்பாளையம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராமநாதன் தலைமையில் நடைபெற்றது புதுப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மலா முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெசுதி சரவணன் எம்எல்ஏ மற்றும் புதுப்பாளையம் யூனியன் சேர்மன் சி.சுந்தரபாண்டியன் ஆகியோர் பங்கேற்று குத்து விளக்கு ஏற்றி ரிப்பன் வெட்டி வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமை துவக்கி வைத்தனர்.

அப்போது கலசபாக்கம் எம்எல்ஏ சரவணன் பேசுகையில் ; தாயுள்ளம் கொண்ட தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி, பெண்களுக்கான ஆட்சியாக நடைபெற்று வருகிறது திமுக ஆட்சிக்கு வரும்போது எல்லாம் பெண்களுக்கான நலதிட்டங்களை செயல்படுத்தப்படுகிறது பெண்களுக்காக எண்ணற்ற திட்டங்கள் இந்த ஆட்சியில் செயல்படுத்தப்படுகிறது.

வாழ்க்கை தரம் உயர வேண்டும் என்பதற்காக தாயுள்ளத்தோடு குடும்ப பெண்களுக்கு உடன் பிறவா சகோதரனாய் தாயாய் தகப்பனாய் இருந்து மாதம் ரூ 1000 உரிமைத் தொகையை முதலமைச்சர் மு க ஸ்டாலின் கொடுத்துள்ளார். தமிழக அரசு சார்பில் நடைபெறும் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு கண் பல் காது மூக்கு தொண்டை வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் நீரிழிவு நோய் காசநோய் இருதய நோய் மகளிர் மருத்துவம் கர்ப்பப்பை புற்றுநோய் எலும்பு மூட்டு நோய் உள்ளிட்ட நோய்களுக்கு சிறப்பு சிகிச்சையும் மற்றும் சித்த மருத்துவ சிகிச்சையும் இலவசமாக அளிக்கப்படும் அதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

இம்முகாமில் இரத்தத்தில் இரும்பு சத்து அளவு கொழுப்பின் அளவு இரத்த அழுத்த பரிசோதனை இசிஜி பரிசோதனை சிறுநீரில் உப்பு சர்க்கரை அளவு கண்டறிதல் கண்புரை கண்டறியப்படும் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிறப்பு சிகிச்சைகள் செய்யப்படுகிறது அதனை பொதுமக்கள் நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் உங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் வேண்டும் என்றால் எந்த நேரத்திலும் என்னிடம் வாருங்கள் உங்களுக்கு நான் செய்வதற்காக தயாராக உள்ளேன் என்று எம்எல்ஏ பெசுதி சரவணன் கூறினார்.

மேலும் இம்முகாமில் திமுக ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் ஒரவந்தவாடி ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி ராஜாமணி ஒன்றிய குழு உறுப்பினர் முனியப்பன் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஏழுமலை ஊராட்சி செயலாளர் சரவணன் சுகாதார துறை நேர்முக உதவியாளர் ராஜேந்திரகுமார் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளும் ஒன்றிய குழு உறுப்பினர்களும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகளும் தொண்டர்களும் மற்றும் மூத்த முன்னோடிகளும் அரசு அதிகாரிகளும் மருத்துவக் குழுவினர்களும் சுகாதார ஆய்வாளர்களும் ஊர் பொதுமக்களும் பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS