கடந்த 10 தினங்களாக சங்கரன்கோவில் மற்றும் புளியங்குடி பொதுமக்களுக்கு குடிநீர் குழாய் பாதிப்பு. நகர்மன்ற தலைவி விஜயா பாண்டியன் நேரில் சென்று ஆய்வு.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் புளியங்குடிபகுதி மக்களுக்கு புளியங்குடி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் கோட்டைமலையாற்றில் குடிநீர் எடுக்கப்பட்டு சங்கரன்கோவில் மற்றும் புளியங்குடி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
குடிநீர் ஆதாரமாக பெரிதும் விளங்கும் இத்திட்டம் 1966 முன்னாள் முதலமைச்சர் காமராஜர் ஆட்சியில் கோட்டைமலை ஆறு சங்கரன்கோவில் குடிநீர் திட்ட திட்டம் நிறைவேற்றப்பட்டு எந்தவித அழுத்தமும் (பம்பிங்,) இல்லாமல் தண்ணீர் சங்கரன்கோவில் மற்றும் புளியங்குடிக்கு வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையால் நீர் வரத்து அதிகமாகி தண்ணீர் வரும் குழாய்களுக்குள் அடைப்பு ஏற்பட்டது.
இதனால் கடந்த 10 தினங்களாக சங்கரன்கோவில் மற்றும் புளியங்குடி பொதுமக்களுக்கு கோட்டமலை ஆற்றில் இருந்து குடிநீர் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது.
குழாயில் ஏற்பட்ட அடைப்பினை சரி செய்யும் பணி அங்கு நடைபெற்று வருகிறது அப்பகுதிக்கு புளியங்குடி நகர்மன்ற தலைவி விஜயா பாண்டியன் நேரில் சென்று குழாய் அடைப்பு ஏற்பட்டுள்ள வனப்பகுதிக்குள் சென்று அப்பணியினை பார்வையிட்டு பணியாளர்களோடு ஆலோசனை நடத்தினார்.
மேலும் விரைந்து குழாய் அடைப்பினை சரி செய்யுமாறு அவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.