கடலூர் அருகே தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியின் தலைமையில் உண்ணா நிலை போராட்டம்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு திட்டக்குடி, இளமங்கலம் பகுதியில் அரசினர் மாணவர் விடுதி உள்ளது.
இந்த மாணவர் விடுதி 1995 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த விடுதியில் 198 மாணவர்கள் தங்கும் அளவிற்கு இட வசதி உள்ளது.
நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற கல்வியாண்டில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களில் 149 மாணவர்கள் தங்கியுள்ளனர்.
இந்த நிலையில் இந்தக் கட்டிட அனைத்து அறைகளின் மேல் கூரைகள், பெயர்ந்து விழுந்து கம்பிக்கள் கம்பிகள் வெளியில் தெரிகின்றன.
இந்தக் கட்டிடம் எப்ப வேண்டுமானாலும் இடிந்து விழும் அளவில் சிதலமடைந்து உள்ளது. இதனால் மாணவர்கள் படிக்கும் போதும், உறங்கும் போதும் எந்த நேரத்தில் இடிந்து மேலே விழுமோ என்ற அச்சத்தில், உயிர் பயத்தில் உள்ளே தங்கி உள்ளனர்.
சில மாணவர்கள் பயந்து கொண்டு விடுதியில் தங்குவதும் இல்லை. இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியின் தலைவர்
தயா. பேரின்பம் தலைமையில் உண்ணா நிலை அறப்போராட்டம் நடத்தினார்கள்.
இந்த தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திட்டக்குடி காவல்துறையினர், உண்ணா நிலை போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்படிக்கை ஏற்படாததால், சம்பந்தப்பட்ட ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகளை சந்திப்பதாக காத்திருந்தனர்.
விடுதியின் வாடனை அழைத்து இந்தக் கட்டடம் சேதம் அடைந்ததை குறித்து அரசுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதா என்று கேட்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்ட சமூக நல பாதுகாப்பு கூடுதல் ஆட்சியர் தொலைபேசியின் மூலம் உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தொடர்பு கொண்டு 15 நாட்களுக்குள் மாணவர்களை மாற்று இடத்தில் தங்க வைக்கப்படும் என உத்தரவாதம் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து விடுதியின் வார்டன் எழுத்துப்பூர்வமாக எழுதியும் கொடுத்துள்ளார். அதனைப் பெற்றுக் கொண்ட தமிழக விவசாய மக்கள் கட்சியினர் உண்ணா நிலை அறப்போராட்டத்தை கைவிட்டு தற்காலிகமாக கலைந்து சென்றனர்.