BREAKING NEWS

கடலூர், ஸ்ரீ பவானி கல்வி நிறுவனத்தில் உலக எய்ட்ஸ் தினம் மற்றும் தேசிய பார்மசி வார விழா நடைபெற்றது. 

கடலூர், ஸ்ரீ பவானி கல்வி நிறுவனத்தில் உலக எய்ட்ஸ் தினம் மற்றும் தேசிய பார்மசி வார விழா நடைபெற்றது. 

கடலூர் செய்தியாளர் கொ. விஜய்.

 

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள கண்டப்பங்குறிச்சி ஸ்ரீ பவானி கல்வி நிறுவனம், மற்றும் நல்லூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து ஸ்ரீ பவானி பார்மசி கல்லூரியில் உலக எய்ட்ஸ் தினம் மற்றும் தேசிய பார்மசி வார விழா நிகழ்ச்சி நடைபெற்றது. 

 

 

இந்நிகழ்ச்சிக்கு பவானி கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் தாளாளர் ஜெ.நாரயணன் தலைமை தாங்கினார், கல்வி நிறுவன செயலாளர் மகாலட்சுமி நாராயணன் முன்னிலை வகித்தார். 

 

 

சிறப்பு விருந்தினர்களாக நல்லூர் வட்டார மருத்துவர் தமிழரசன்,மற்றும் நல்லூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய ICTC ஆலோசகர் இந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி, எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு, நோய் தடுப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை மாணவர்களுக்கு வழங்கினார்கள். 

 

 

இந்நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாக அலுவலர் பொன்.சடையமுத்து, பார்மசி கல்லூரி பேராசிரியை மகேஸ்வரி, கல்வியியல் கல்லூரி முதல்வர் திரு பாலகிருஷ்ணன், பேராசிரியர்கள், மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

 

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )