கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும். விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தினர் இன்று பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்டுமான பொருட்களான ஜல்லி, எம் சாண்டு, பி சாண்டு உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் விலை கடந்த 6 மாதங்களாக கடுமையான அளவு உயர்ந்துள்ளதால் கட்டுமான பணிகள் தேக்கம் அடைந்துள்ளது.
இதன் காரணமாக கட்டட தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி
கட்டுமான பொருட்கள் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும் என்கின்ற கோரிக்கைகளை வலியுறுத்தி,
அகில இநதிய கட்டுனர் சங்கம், கட்டுமான பொறியாளர் சங்கத்தினர், கட்டிட தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆகியோர் இணைந்து, இன்று ஒரு நாள் பணிகளை புரக்கணித்து தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், தமிழக அரசே கனிம பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டும்.
கட்டுமான பொருட்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்கின்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கைகளில் ஏந்தி கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினார்கள்.