BREAKING NEWS

கத்தியால் குத்திக்கொண்டு தொழிலாளி தற்கொலை முயற்சி!!

கத்தியால் குத்திக்கொண்டு தொழிலாளி தற்கொலை முயற்சி!!

 வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லூர் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் வயது 36 இவருடைய மனைவி காமாட்சி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். விஜயகுமார் குடியாத்தம் அடுத்த பக்கம் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் மூட்டை தூக்கும் தொழிலாளராக வேலை பார்த்து வருகிறார்.

விஜயகுமாருக்கும் அவரது மனைவி காமாட்சிக்கும் இடையே சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறு காரணமாக காமாட்சி கோபித்துக் கொண்டு திருவண்ணாமலை அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் பகுதியை சேர்ந்த விஜயகுமார் செல்லும் போது கேலி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த விஜயகுமார் கத்தியால் தனது வயிற்றில் குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் தொழிலாளி தனக்குத்தானே கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

CATEGORIES
TAGS