கன்னியாகுமரி – திருநெல்வேலி நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில் சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை அடைத்ததை கண்டித்து தளபதி சமுத்திரத்தில் பிணத்துடன் சாலை மறியல்.

கன்னியாகுமரி – திருநெல்வேலி நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில் சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை அடைத்ததை கண்டித்து நாங்குநேரி அருகே தளபதி சமுத்திரத்தில் பிணத்துடன் சாலை மறியல் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 25 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு.
தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் மு.அப்பாவு அவர்கள் நெல்லையில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் நடந்த சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சபாநாயகர் முன்னிலையில் வேலி அகற்றப்பட்டு இறந்தவரின் உடல் மைதானத்திற்கு கொண்டுவரப்பட்டது .
இதனை அடுத்து 4 வழி சாலையில் சுமார் அரை மணி நேரம் நடந்த திடீர் சாலை மறியல் கைவிடப்பட்டது.
CATEGORIES திருநெல்வேலி
TAGS கன்னியாகுமரி - திருநெல்வேலி நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை சாலை மறியல்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்நாங்குநேரி தளபதி சமுத்திரத்தில் பிணத்துடன் சாலை மறியல்முக்கிய செய்திகள்