BREAKING NEWS

கல்லிடைக்குறிச்சியில் இருந்து அம்பாசமுத்திரம் தற்காலிகப் போக்குவரத்து மாற்ற அறிவிப்பு.

கல்லிடைக்குறிச்சியில் இருந்து அம்பாசமுத்திரம் தற்காலிகப் போக்குவரத்து மாற்ற அறிவிப்பு.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் நகரில் கிருஷ்ணன் கோவில் அருகிலும், தீர்த்தபதி மேல்நிலைப் பள்ளி அருகிலும், நதியுன்னி கால்வாயின் குறுக்கே உள்ள சிறுபாலங்கள் அகலப்படுத்தி புதியதாக பாலம் கட்டும் பணிக்காக வியாழக்கிழமை முதல் நெடுஞ்சாலைத்துறை மூலம் பணிகள் தொடங்கியது.

இதையடுத்து அன்று கல்லிடைக்குறிச்சியில் இருந்து அம்பாசமுத்திரம் வரும் இலகுரக வாகனங்கள் தாமிரபரணி ஆற்றுச்சாலை வழியாகவும், முக்கூடலில் இருந்து வரும் இலகு ரக வாகனங்கள் தீர்த்தபதி பள்ளி அருகே அமைக்கப்பட்டுள்ள மாற்றுப்பாதை வழியாகவும் நகருக்குள் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இதுபோன்று கல்லிடைக்குறிச்சி வழியாக அம்பாசமுத்திரம் வரும் அரசு பேருந்துகள் நிறுத்த அம்பாசமுத்திரம் அரோமா மெட்ரிக் பள்ளி அருகில் உள்ளஇடம் தற்காலிகத் திடலில் பேருந்து நிலையம் அமைக்கபடும் என்று நெடுஞ்சாலை துறை அறிவித்துள்ளது.

Share this…

CATEGORIES
TAGS