BREAKING NEWS

கல்லூரி மாணவ- மாணவிகள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற தமிழ் கனவு நிகழ்ச்சி; சிறந்த கேள்விகளை எழுப்பிய மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் விருதுகளை வழங்கினார்.

கல்லூரி மாணவ- மாணவிகள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற தமிழ் கனவு நிகழ்ச்சி; சிறந்த கேள்விகளை எழுப்பிய மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் விருதுகளை வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கல்லூரி மாணவ- மாணவிகள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற தமிழ் கனவு நிகழ்ச்சி; 

மரபின் வளமையையும், பண்பாட்டின் செழுமையையும், சமூக- சமத்துவத்தையும், பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளையும் இளம் தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் நோக்கில் தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ் கனவு என்னும் பண்பாட்டு நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது.

 

அவ்வகையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவிலில் உள்ள கலைமகள் தனியார் கல்லூரியில் இன்று தமிழ் கனவு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி மகாபாரதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 14 கல்லூரிகளில் பயிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

 

 

இதில் கவிஞர் அறிவுமதி, கவிஞர் நந்தலாலா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர். முடிவில் சிறந்த கேள்வி கேட்ட மாணவ-மாணவிகள் 6 பேருக்கு கேள்வி நாயகன் கேள்வியின் நாயகி ஆகிய விருதுகளையும்,

 

நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் தமிழ் பெருமிதம் என்ற கையேடு வழங்கப்பட்டு, அதில் இருந்த தகவல்களில் சிறந்த தகவல் குறித்து மேடையில் பேசிய 4 மாணவ-மாணவிகளுக்கு பெருமித நாயகன், பெருமித நாயகி என்ற விருதுகளையும் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி விருதுகளை வழங்கி பாராட்டி பேசினார்.

 

CATEGORIES
TAGS