BREAKING NEWS

காஞ்சிபுரம் கச்சபேஷ்வரர் கோவிலில் 9அடி உயரமுடைய ஐம்பொன் நடராஜர் சிலைக்கு 48வகை வாசனாதி திரவியங்கள் சிறப்பு அபிஷேகம்.

காஞ்சிபுரம் கச்சபேஷ்வரர் கோவிலில் 9அடி உயரமுடைய ஐம்பொன் நடராஜர் சிலைக்கு 48வகை வாசனாதி திரவியங்கள் சிறப்பு அபிஷேகம்.

ஆருத்ராவையொட்டி புகழ்பெற்ற காஞ்சிபுரம் கச்சபேஷ்வரர் கோவிலில் 9அடி உயரமுடைய ஐம்பொன் நடராஜர் சிலைக்கு 48வகை வாசனாதி திரவியங்கள்,23பழ வகைகள்,பால்,தயிர்,இளநீர்,சந்தனம் ஆகியவை கிலோ கணக்கில் கொண்டு சிறப்பு அபிஷேகம்.

 

விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்

 

கோவில் நகரம் என்று அழைக்கப்படக்கூடிய காஞ்சிபுரம் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.

 

 

இத்திருத்தளத்தில் பெருமாள் மச்ச அவதாரத்தில் சிவனை வழிபட்டதாக வரலாறு.இத்தகைய புகழுக்கூரிய இக்கோவிலில் ஆருத்ராவையொட்டி ஆண்டுதோறும் நள்ளிரவில் அங்குள்ள நடராஜருக்கும் சிவகாமி அம்மையாருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம்.

 

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்றின் காரணமாகபல்வேறு கட்டுப்பாடுகளுடன் இவ்விழாவானது நடைபெற்று வந்தது.

 

 

 

இந்த நிலையில் நள்ளிரவு ஆருத்ராவையொட்டி 9 அடி உயரம் கொண்ட ஐம்பொன் நடராஜர் சிலைக்கு 48வகை வாசனாதி திரவியங்கள், 23பழ வகைகள், பால், தயிர், இளநீர், சந்தனம், தேன் மற்றும் மலர்கள் ஆகியவை கிலோ கணக்கில் கொண்டு அபிஷேகமானது நடைபெற்றது.

 

பின்னர் ஆராதனை நிகழ்வும் நடைபெற்றது.இரண்டு ஆண்டுகளுக்கு பின் பக்தர்கள் அனுமதியுடன் நடைபெற்ற இந்த ஆருத்ரா விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு நடராஜரை வணங்கி வழிபட்டு சென்றனர்.

 

CATEGORIES
TAGS