BREAKING NEWS

காட்பாடியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா விமர்சையாக நடைபெற்றது.

காட்பாடியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா விமர்சையாக நடைபெற்றது.

வேலூர் மாவட்டத்தில் தற்பொழுது 105 டிகிரி வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகின்றது பொதுமக்கள் வெயில் மற்றும் அனல் காற்றில் இருந்து தங்களை காத்துக் கொள்ள ஏதுவாக அதிமுக சார்பில் வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.

 

 

இதனை அடுத்து வேலூர் மாவட்டம் காட்பாடி வள்ளிமலை கூட்டு சாலையில் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி சார்பில் வன்டறந்தாங்கள் ஊராட்சி மன்ற தலைவரும் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளருமான எஸ்.பி ராகேஷ் அவர்களின் ஏற்பாட்டில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா விமர்சையாக நடைபெற்றது.

 

இதில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் எஸ் ஆர் கே அப்பு கலந்து கொண்டு நீர் போர் பந்தலினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி, வெள்ளரிக்காய், இளநீர், மோர், குளிர்பானங்கள் உள்ளிட்டவைகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.

 

 

 

இந்த நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றிய செயலாளர் கே.எஸ் சுபாஷ், பகுதி செயலாளர்கள் ஜனார்த்தனன், பேரவை ரவி, அண்ணா ஆட்டோ ஓட்டுனர் தொழிற்சங்க பொருளாளர் கே.பி ஆனந்தன், கோரந்தாங்கள் ஏழுமலை, அமர்நாத் உட்பட அதிமுக மாவட்ட , ஒன்றிய, பகுதி, வட்ட, கிளை முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS