BREAKING NEWS

காட்பாடியில் காவல்துறையினரை கண்டித்து டாக்ஸி தொழிலாளர்கள் மற்றும் வேலூர் மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

காட்பாடியில் காவல்துறையினரை கண்டித்து டாக்ஸி தொழிலாளர்கள் மற்றும் வேலூர் மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

வேலூர் மாநகருக்குட்பட்ட காட்பாடி அடுத்த காந்திநகர், ஓடைபிள்ளையார் கோவில் எதிரே உள்ள சர்வீஸ் சாலையின் ஓரத்தில் சுமார் 75 டாக்ஸி ஓட்டுநர்கள் போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் எந்தவித இடையூறும் இல்லாமல் கடந்த 21 ஆண்டு காலமாக டாக்ஸி ஓட்டி அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

 

 

இந்நிலையில் தற்போது மாநகர காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள், டாக்ஸிகளை இங்கு நிறுத்தக்கூடாது, நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என மிரட்டி நாள்தோறும் தொடர்ந்து டாக்சிகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். இதனால் டாக்ஸி ஓட்டுனர்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

 

வேலை வாய்ப்புகளை அதிகம் உருவாக்குவோம் என்று தமிழ்நாடு முதல்வர் தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை கேள்விக்கு உள்ளாக்கும் வகையில் வேலூர் மாநகர காவல் துறையினரின் செயல்பாடு உள்ளது. மேலும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வசிக்கும் பகுதியிலேயே காவல்துறையினரின் இத்தகைய அராஜக போக்கு கண்டிக்கத்தக்கதாக உள்ளதோடு அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தக் கூடிய நிலையிலும் உள்ளது.

 

 

ஆகவே டாக்ஸி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையிலும், காவல்துறை அத்துமீறி அபராத கட்டணம் வசூல் செய்வதை தடுக்க கோரியும் காட்பாடி அடுத்த ஓடை பிள்ளையார் கோவில் அருகே வேலூர் மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

CATEGORIES
TAGS