காட்பாடி அருகே வீட்டில் பதுக்கி அரசு மது பாட்டில்கள் விற்ற பெண் உட்பட 83 மது பாட்டில்கள் பறிமுதல் போலீசார் நடவடிக்கை.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த அரும்பருத்தி கிராமத்தில் வீட்டில் பதுக்கி வைத்து அரசு மது பாட்டில்கள் விற்பதாக திருவலம் போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் திருவலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிலம்பரசன், காவலர்கள் செந்தில்,சுந்தர், பெண் காவலர்கள் ஆனந்தி, சங்கீதா, ஆகியோர் அரும்பருத்தி கிராமத்தில் சோதனை மேற்கொண்டனர்.
அப்பொழுது அரும்பருத்தி கிராமம் திரௌபதி அம்மன் கோவில் தெரு பகுதியில் விஜயா (56) என்பவர் வீட்டில் அரசு மது பாட்டில்கள் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தெரிய வந்தது இதனை அடுத்து போலீசார் விஜயாவை கைது செய்து அவரிடமிருந்து 83 அரசு மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து காட்பாடி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
CATEGORIES குற்றம்
TAGS அரசு மது பாட்டில்அரும்பருத்தி கிராமம்காட்பாடிகுற்றம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்முக்கிய செய்திகள்வீட்டில் பதுக்கி வைத்து விற்ப்பனைவேலூர்வேலூர் மாவட்டம்