BREAKING NEWS

காட்பாடி கழிஞ்சூர் திரௌபதி அம்மன் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் திருவிழா.!

காட்பாடி கழிஞ்சூர் திரௌபதி அம்மன் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் திருவிழா.!

எருது விடும் விழாவிற்கு கூடுதலாக நேரம் கொடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கை..

வேலூர் மாவட்டம் காட்பாடி கழிஞ்சூர் கிராமத்தில் 50ஆம் ஆண்டு திரௌபதி அம்மன் திருவிழாவை முன்னிட்டு ஊர் தர்மகர்த்தா பார்த்திபன் தலைமையில் எருது விடும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

 

முன்னதாக விழாவில் வருவாய்த் துறையினர் முன்னிலையில் விழா குழுவினர் உறுதி மொழி ஏற்றனர்.இதில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, அண்டை மாநிலமான ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. பின்னர் பங்கேற்ற காளைகள் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து சென்றன.

 

இந்த எருது விடும் திருவிழா இரண்டு சுற்றுகள் நடைபெற்றது அதில் குறித்த நேரத்தில் இலக்கை அடைந்த காளைகளுக்கு முதல் பரிசாக 1,00,010 இரண்டாம் பரிசாக 80,008 ரூபாய்யும், மூன்றாம் பரிசாக 60,006 ரூபாயும் ரூபாயும் பரிசுகள் வெற்றி பெற்ற காளைகளுக்கு வழங்கப்பட்டன.

 

இந்த இருந்து விடும் திருவிழாவை ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர். காளைகள் முட்டியதில் 10 க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயமடைந்தனர்.காய மடைந்தவர்களுக்கு அங்கே இருந்த மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர் மேலும் எருது விழும் விழாவை முன்னிட்டு காட்பாடி போலீசார் 50 மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விழா குழுவை சேர்ந்த ஊர் தர்மகர்த்தா பார்த்திபன் எருது விடும் திருவிழாவை காண ஏராளமானோர் வருகின்றனர்.காளைகள் அதிக அளவில் பங்கேற்கின்றன எனவே எருது விடும் விழா நடத்த இன்னும் இரண்டு மணி நேரம் கூடுதல் அவகாசம் கொடுத்தால் நன்றாக இருக்கும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

CATEGORIES
TAGS