காட்பாடி சார் பதிவாளர் அலுவலகம் திறப்பது எப்போது? பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு!

வேலூர் மாவட்டம், காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தின் பழைய கட்டடம் மிகவும் வலுவிழந்து இடிந்து விழும் பேராபத்தில் இயங்கி வருகிறது இந்நிலையில் காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்துக்கு என்று புதியதாக கட்டடம் காட்பாடி கிளித்தான்பட்டறை அருகே கட்டப்பட்டு திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது.
ஆனால் இந்த கட்டடம் கட்டி திறக்கப்படாமல் பூட்டி வைத்த நிலையில் இருப்பதால் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இந்த சார் பதிவாளர் அலுவலகம் எப்போது திறக்கப்படும் என்று ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.
இந்த கட்டடம் எப்போது திறந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்பது சிதம்பர ரகசியமாகவே உள்ளது. “கடலில் அலை எப்போது ஓய்வது, எப்போது மீன்பிடிப்பது” என்பது போல காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தின் நிலை இருந்து வருகிறது.
இதன் திறப்பு விழா விரைவில் நடக்குமா? அல்லது தள்ளிப் போகுமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
செய்தி ஆசிரியர் ச வாசுதேவன்