காட்பாடி தாலுகா இளையநல்லூர் அடுத்து குப்பிரெட்டி தாங்கள் கிராமத்தில், ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் மஹா கும்பாபிஷேகம்
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா இளையநல்லூர் அடுத்து குப்பிரெட்டி தாங்கள் கிராமத்தில், ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் மஹா கும்பாபிஷேகம் இன்று 4.5.2025 காலை 7 மணி அளவில் மற்றும்,
திரௌபதி அம்மன் ஆலய ஜீர்ணோதாரண மகா கும்பாபிஷேக விழா, 4.5.2025 இன்று காலை 10 மணி அளவில் மேளதாள முழக்கங்களுடன், அதிவிமரிசையாக நடைபெற்றது .
இவ்விழாவில் கோபூஜை, மகா கணபதி ஹோமம், எஜமான் சங்கல்பம்,விநாயகர் பூஜை, புண்ணியயாக வாச்சனம், சுவாதி வாசணம், பிரித்தியுங்கம், ரக்ஷாபந்தனம்,சாந்தி திருமஞ்சனம், மகா கும்ப ஆராதனம், தத்துவ நிவாச ஹோமம், சையானதி வாசம், புஷ்வாதி வாசம், விஸ்வரூப தரிசனம், சுப்ரபாத சேவை, கும்ப ஆராதனம், மஹா பூர்ணாஹுதி ஹோமங்கள், பூஜைகள், மற்றும் அன்னதானம் உள்ளிட்டவைகள் மூன்று நாட்களாக தொடர்ந்து நடைபெற்றது.
உடன். கவுன்சிலர் மற்றும் ஊர் தலைவர் . மற்றும் வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என, 1000 திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் .