BREAKING NEWS

காமராஜர் நகர்மன்ற மேல்நிலைப் பள்ளியின் நாட்டின் 77வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்.

காமராஜர் நகர்மன்ற மேல்நிலைப் பள்ளியின் நாட்டின் 77வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்.

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர்மன்ற மேல்நிலைப் பள்ளியின் நாட்டின் 77வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை திருமதி எவாஞ்சலின் பியூலா ராஜ செல்வி அவர்கள் தலைமை வைத்தார்.

 

உதவி தலைமை ஆசிரியர் திருமதி சையது ராபியாத் அவர்கள் முன்னிலை வகித்தார். வரவேற்புரையை பள்ளியின் உடைய முதுகலைப் பொருளாதார ஆசிரியர் திரு பொன்னுசாமி ஆற்றினார். நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்கள் கொடியேற்றி மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாளையங்கோட்டை புனித யோவான் கல்லூரியின் ஆங்கில துறையைச் சார்ந்த பேராசிரியர் கேத்திரபால் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

 

நீட் எக்ஸாம் எழுதி தேர்ச்சி பெற்று மருத்துவம் படிக்க தேர்வாகியுள்ள முன்னாள் மாணவர் கலைச் செல்வம் மற்றும் மத்திய அரசினுடைய கல்லூரிகளுக்கு தேர்வாகியுள்ள முன்னாள் மாணவர்கள் வெங்கட்ராமன் ராஜேஷ் அபூபக்கர் சித்திக் ஆகியோருக்கு இளம் சாதனையாளர் விருது வழங்கிய கௌரவிக்கப்பட்டனர். விழாவின் நிறைவாக மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

 

 நிகழ்ச்சியின் நன்றியுரை பள்ளியின் ஆசிரியர் திருமதி மாரியம்மாள் ஆற்றினார். நிகழ்ச்சிகளை முதுகலை தமிழாசிரியர் திரு ஆண்டோ ஆரோக்கிய ஜோதி தொகுத்து வழங்கினார். இதில் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Share this…

CATEGORIES
TAGS