காவேரிப்பாக்கத்தில் பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் கோவிலில் சனிக்கிழமை ஸா்வ திருவோனம் ஏகாதசி முன்னிட்டு சிறப்பு அலங்காரம் ஆராதனை.
விரைவில் கோவில் கும்பாபிஷேகம் நடைப்பெற வேண்டும் என பக்தா்கள் கூட்டு பிராத்தனை
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் கோட்டை பெருமாள் தெருவில் அமைந்துள்ள ராஜாக்கள் வணங்கிய மிகவும் பழமை வாய்ந்த பெருந்தேவி தாயாா் ஸமேத வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் இன்று சனிக்கிழமை ஸா்வ ஏகாதசி முன்னிட்டு மாலை திருவோணம் நட்டசத்திரத்தில் வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைப்பெற்றது .
தொடா்ந்து அதே பகுதியை சேர்ந்த பெண்கள் பழமை வாய்ந்த கோவில் விரைவில் கும்பாபிஷேகம் நடைப்பெற வேண்டும் என கூட்டு பிராத்தனையில் ஈடுபட்டனா் அதேபோல் பக்தி பஜனை பாடல்களை பாடி பெருமாளை வழிபட்டு சென்றனர் இதில் ஊர் பொதுமக்கள் நாட்டாமைக்காரர்கள் என பலரும் பங்கேற்று சுவாமியை வழிபட்டு சென்றனர்.
மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.
CATEGORIES ஆன்மிகம்
TAGS ஆன்மிகம்காவேரிப்பாக்கம்காவேரிப்பாக்கம் பெருந்தேவி தாயாா் ஸமேத வரதராஜ பெருமாள் கோவில்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்முக்கிய செய்திகள்ராணிபேட்டைராணிப்பேட்டை மாவட்டம்