கிராம பொதுமக்கள் புகார் கொடுத்த விஏஓ தமிழழகனுக்கு பதவி உயர்வு வழங்கி அழகு பார்க்கும் வருவாய்த்துறை!

விஏஓ தமிழழகன் வேலூர் மாவட்டம், திப்பசமுத்திரம் ஊராட்சி, அணைக்கட்டு வட்டம் பகுதியில் பணியாற்றி வந்தார். அப்போது இவர் ஏரி நீர் நிலை புறம்போக்கு,
இறப்பு சான்றிதழ் வழங்க,
வாரிசு சான்றிதழ் வழங்க,
கூட்டு பட்டா, தனி பட்டா வழங்க,
இருப்பிடச் சான்றிதழ் வழங்க தலா ரூ.500 முதல் ரூ.50000 வரை கை நீட்டி வாய் கூசாமல் லஞ்சம் தந்தால் மட்டுமே வேலையை முடித்து தருவேன் என பிச்சை எடுத்து அப்பகுதியைச் சேர்ந்த ஏழை, எளிய மக்களின் ரத்தத்தை ஸ்ட்ரா போட்டு உறிஞ்சி குடித்தார்.
இதனால் கிராம மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி ஓடாய் தேய்ந்து போனதுதான் மீதமானது.
அதேபோன்று தானே நில அளவை செய்து துணை தாசில்தார் பொன். முருகனை கையில் வைத்துக் கொண்டு தாசில்தார் ( வட்டாட்சியர்) வேண்டாவை என் பாக்கெட்டில் வைத்துள்ளேன் என்று சொல்லி கொக்கரித்தார் இந்த கொடூரன்.
ரூபாய் 80000 பெற்றுக்கொண்டு நீர் நிலை புறம்போக்கு ஏரியை தனி மனிதன் ஒருவருக்கு பட்டா போட்டு கொடுத்துள்ளார் இந்த புண்ணியவான். இப்படி அதிகார துஷ்பிரயோகங்கள் அளவுக்கு அதிகமாக செய்து உள்ளார் இந்த விஏஓ தமிழழகன். இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஏரிக் கரையை உடைத்து நில ஆக்கிரமிப்புக்கும்,
ஏரி நடுவில் கல்லை நட்டு வைப்பதற்கும் துணை நின்றவர்தான் இந்த தெனாவெட்டு விஏஓ தமிழழகன். இதனால் பார்த்து பார்த்து பொறுமையிழந்த ஊர் பொதுமக்கள் பலர் ஒன்று சேர்த்து புகார் மனுவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.
இதன் பேரில் கலெக்டர் வந்து நேரில் பார்வையிட்டு விட்டு ஏரியின் நடுவில் நடப்பட்ட கல்லை உடனடியாக அகற்ற வேண்டும் எனச் சொல்லி உத்தரவிட்ட பின்னரும் ஏரியின் நடுவில் நடப்பட்ட கல்லை அகற்றாமல் யார் வந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன்.
வட்டாட்சியர் வேண்டா மற்றும் துணை வட்டாட்சியர் பொன்.முருகன் மற்றும் உயரதிகாரிகள் துணை தனக்கு உள்ளதாகவும், ஆளும் கட்சி தனக்கு பக்க பலமாக உள்ளது எனவும் கூறி தமிழழகன் மார்தட்டிக் கொண்டார்.
இப்படி திப்பசமுத்திரம் கிராமத்தில் இல்லாத ஊழல்களை தனது விருப்பம் போல் செய்து தனது பாக்கெட்டை நிரப்பி கொண்டு சென்ற தமிழழகனுக்கு வருவாய் துறை கொடுத்துள்ளது பதவி உயர்வு.
தற்போது இவர் அணைக்கட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் பணி உயர்வு பெற்றதாக பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
தவறு செய்பவருக்கு தண்டனை கொடுக்காமல் பதவி உயர்வு கொடுத்து அழகு பார்க்கிறது வருவாய்த்துறை என்று சொன்னால் அது மிகையாகாது.
பொதுமக்கள் ஒன்று திரண்டு கொடுத்த புகார் மனுவின் மீது வருவாய் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் எடுக்கும் ஒழுங்கு நடவடிக்கை பதவி உயர்வுதான் போலிருக்கிறது என்று எள்ளி நகையாடுகின்றனர் திப்ப சமுத்திரம் கிராம பொதுமக்கள். இவர் மீது உரிய விசாரணையை நடத்தி ஏரியை தனி ஒரு மனிதனுக்கு பட்டா போட்டு வழங்கிய விஏஓ தமிழழகன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து அவரை நிரந்தரமாக வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்பதே திப்பசமுத்திரம் கிராம பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. இவரால் பாதிக்கப்பட்ட சில பொதுமக்கள் திடீர் போர்க்கொடியும் தூக்க ஆரம்பித்து விட்டனர்.
இந்நிலையில் தமிழழகன் மற்றும் இவருக்கு துணை போன பொன்.முருகன் ஆகியோருக்கு கடுமையான தண்டனையை வருவாய்த்துறை விசாரித்து துறை ரீதியாக உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்பதே அனைவரது ஒட்டுமொத்த கோரிக்கையாகவும், வேண்டுகோளாகவும் மாறி உள்ளது.
இந்த கோரிக்கையையும், வேண்டுகோளையும் நிராகரிக்கும் வருவாய்த்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையை கண்டித்து திப்பசமுத்திரம் வாழ் கிராம பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தவும் ஆயத்தமாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்கு முன் வருவாய்த்துறை முந்திக்கொண்டு விஏஓ தமிழழகன் மற்றும் பொன். முருகன் ஆகியோர் மீது நடவடிக்கையை எடுக்குமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
செய்தி ஆசிரியர் ச வாசுதேவன்