கிருத்திகையை முன்னிட்டு காட்பாடி செங்குட்டையில் அன்னதானம் வழங்கல்!

வேலூர் மாவட்டம், காட்பாடி செங்குட்டை பகுதியில் திரௌபதி அம்மன் கோயில் எதிரில் சித்தூர்- கடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரம் சாமியானா பந்தல் அமைத்து வைகாசி மாத கிருத்திகையை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த அன்னதானம் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இடைவிடாது வழங்கப்பட்டது.
இந்த நன்னாளில் முருக பக்தர்களுக்கு வேலூர் செங்குட்டை தொழிலதிபர் அச்சுதன் -அமுதா தம்பதியர் அன்னதானம் வழங்கினர்.
இந்த அன்னதானத்தில் கேசரி மற்றும் மதிய உணவு வெஜிடபிள் பிரியாணி, கத்தரிக்காய் கொஸ்து வழங்கப்பட்டது.
சுமார் 1000க்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் வரிசையில் நின்று இந்த அன்னதானத்தை பெற்று உண்டு மகிழ்ந்தனர்.
இந்த அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் பாஜக பிரமுகர் கமல விநாயகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
TAGS அன்னதானம்ஆன்மிகம்காட்பாடிகிருத்திகை முன்னிட்டு அன்னதானம்செங்குட்டைதமிழ்நாடுதலைப்பு செய்திகள்முக்கிய செய்திகள்வேலூர்வேலூர் மாவட்டம்