BREAKING NEWS

கிருஷ்ணகிரி அருகே உள்ள ஜெகதேவி கிராமத்தில் 40- ம் ஆண்டு மாபெரும் எருது விடும் விழா..! சீறிப்பாய்ந்த காளைகள்

கிருஷ்ணகிரி அருகே உள்ள ஜெகதேவி கிராமத்தில் 40- ம் ஆண்டு மாபெரும் எருது விடும் விழா..! சீறிப்பாய்ந்த காளைகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பல்வேறு கிராமங்களில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான எருது விடும் விழா மஞ்சுவிரட்டு போன்றவை நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கிருஷ்ணகிரி அருகே ஜெகதேவி கிராமத்தில் 40-ம் ஆண்டு மாபெரும் எருது விடும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. எருதுவிடும் விழாக்குழுவினர்கள் முன்னிலையில்
நடைபெற்ற இந்த எருது விடும் விழாவில் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, குப்பம், வாணியம்பாடி, ஆம்பூர், பாகூர், பாகலூர், கப்பல் வாடி, ஊத்தங்கள் போன்ற பல்வேறு இடங்களில் இருந்து 350 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

 

மாவட்ட நிர்வாகத்தின் நிபந்தனைகள் படி காளைகளுக்கு முழு பரிசோதனை செய்யப்பட்டு இருபுறமும் தடுப்புகள் அமைத்து அதன் நடுவே எருதுகள் ஓட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
பின்னர் வாடிவாசலில் இருந்து ஒவ்வொரு எருதுகளாக விடப்பட்டது. இதில் 120 மீட்டர் தூரத்தினை விரைவாக கடந்த எடுதுகளுக்கு பரிசுகள் வழங்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது.

 

பின்னர் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த எருதுகளை ஏராளமான வீரர்கள் காளைகளை தழுவி வீர விளையாட்டை விளையாடினர். இந்த எருது விடும் விழாவை கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுப்புறங்களைச் சேர்ந்த 7,000 மேற்பட்ட பொதுமக்கள் இளைஞர்கள் கண்டு மகிழ்ந்தனர்.,

 

குறைந்த நேரத்தில் இலக்கை எட்டிய காளைக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சத்து 25 ரூபாயும், இரண்டாவது பரிசாக ரூ.1.லட்சமும் 3-ம்மூன்றாவது பரிசாக 75,000 ரூபாய், என 50 காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

தமிழக அரசின் முழு அனுமதியுடன் நடைபெற்ற இந்த எருது விடும் விழாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு துறை கால்நடை பராமரிப்பு துறை மருத்துவத் துறை சார்ந்த அதிகாரிகளும் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த விழாவிறன ஏற்பாடுகை ஜெகதேவி எருதுவிடும் கங்கத்தினை சேர்ந்த விழாக்குழுவினர் செய்து இருந்தனர்கள்.

CATEGORIES
TAGS