BREAKING NEWS

கிறிஸ்டியன்பேட்டை சோதனை சாவடியில் அரசு பேருந்தில் கடத்திவரப்பட்ட 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது போலீசார் நடவடிக்கை.

கிறிஸ்டியன்பேட்டை சோதனை சாவடியில் அரசு பேருந்தில் கடத்திவரப்பட்ட 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது போலீசார் நடவடிக்கை.

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் அவர்களின் உத்தரவின் பேரில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை மற்றும் பயன்படுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 

இந்த நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தமிழக ஆந்திர எல்லை பகுதியான கிறிஸ்டியான் பேட்டை சோதனை சாவடியில் தேதி காட்பாடி காவல் நிலைய காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் அவர்கள் மற்றும் உதவி ஆய்வாளர் கார்த்தி அவர்களின் தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்ட பொழுது ஆந்திராவில் இருந்து தமிழகம் நோக்கி வந்த ஆந்திரா அரசு பேருந்தில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த செல்வம் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில்,

 

அவர் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சாவை கடத்தி வந்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து செல்வம் என்பவனை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Share this…

CATEGORIES
TAGS