BREAKING NEWS

குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகள் சிலம்பாட்டம் மற்றும் குத்துச்சண்டை போட்டியில் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.

குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகள் சிலம்பாட்டம் மற்றும் குத்துச்சண்டை போட்டியில் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.

மயிலாடுதுறை வருவாய் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி சீர்காழி சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது இதில் குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவன் விஷால் என்பவர் இரட்டைக் கம்பு சிலம்பாட்ட போட்டியில் முதலிடம் பெற்று அரியலூரில் நடைபெற இருக்கும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளார்.

 

சிலம்பாட்ட போட்டியில் குத்தாலம் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவன் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும் மேலும்.மயிலாடுதுறை சாய் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த பெண்கள் பிரிவில் 12 ஆம் வகுப்பு மாணவிகள் விஜயலட்சுமி மற்றும் கல்பனா ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.

 

மாணவர்கள் பிரிவில் 12 ஆம் வகுப்பு மாணவன் சத்தியதேவன் மற்றும் புகழேந்தி ஆகியோர் முதலிடம் பிடித்தனர் திருச்சியில் நடைபெற இருக்கும் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.

 

வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை பள்ளி மேலாண்மை குழு மற்றும் தலைமை ஆசிரியர் ஜே.ஆரோக்கியராஜ்.மண்டல உடற்கல்வி ஆய்வாளர் காந்திமதி.உடற்கல்வி ஆசிரியர் சுவாமிநாதன்.மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் மாநில அளவிலான போட்டிகளிலும் வெற்றி பெற பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )