BREAKING NEWS

குத்தாலம் கடை வீதியில் முகையதீன் ஆண்டவர் பள்ளிவாசல் சஹர் உணவு குழுவினர் சார்பாக கோடைகால குடிநீர் பந்தலில் நீர் மோர் வழங்கப்பட்டது.

குத்தாலம் கடை வீதியில் முகையதீன் ஆண்டவர் பள்ளிவாசல் சஹர் உணவு குழுவினர் சார்பாக கோடைகால குடிநீர் பந்தலில் நீர் மோர் வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கடை வீதியில் முஹையதீன் ஆண்டவர் பள்ளிவாசல் சஹர் உணவு குழுவினர் சார்பாக குத்தாலம் தேர்வுநிலை பேரூராட்சி அமைத்துள்ள கோடைக்கால குடிநீர் பந்தலில் நீர் மோர் வழங்கப்பட்டது.

 

இந்நிகழ்ச்சிக்கு முஹையதீன் ஆண்டவர் பள்ளிவாசல் இமாம் முஹம்மது தலைமை தாங்கினார், பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா மாரியப்பன்,பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் சம்சுதீன் முன்னிலை வகித்தனர், ரியாஸ் வரவேற்றார்,இதில் ஜாமி ஆ பள்ளிவாசல் மாணவர்களும் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கினர்.

 

கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள காரணத்தினால் திரளான பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து மோர் அருந்தி செல்கின்றனர்.

Share this…

CATEGORIES
TAGS