BREAKING NEWS

குமுளி சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உதவி செய்யும் அமைச்சர் ஐ.பெரியசாமி நேரில் வந்து ஆறுதல்.

குமுளி சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உதவி செய்யும் அமைச்சர் ஐ.பெரியசாமி நேரில் வந்து ஆறுதல்.

குமுளி சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உதவி செய்யும் அமைச்சர் ஐ.பெரியசாமி நேரில் வந்து ஆறுதல் காயம் அடைந்த அப்பா &மகன் குடும்பத்திற்கு ரூ.1.50 லட்சம் நிதி உதவி கொடுத்து ஆறுதல்.. 

 

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி, சக்கம்பட்டி, நாச்சியார்புரம், டி.பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்த 10 பேர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சபரிமலைக்கு காரில் சென்றுவிட்டு மீண்டும் திரும்பி வந்த போது, நேற்று இரவு குமுளி மலைச்சாலையில் ஏற்பட்ட விபத்தில் காரில் பயணம் செய்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்.

 

காயம் அடைந்த ஆண்டிப்பட்டியை சேர்ந்த ராஜா அவருடைய 8 வயது மகன் ஹரிகரன் ஆகியோர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியாசாமி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்தார்.

 

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் ராஜா மற்றும் அவரது மகன் ஹரிகரனை நேரில் சந்தித்து அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது சிகிச்சைக்காக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை ராஜாவின் குடும்பத்தினரிடம் கொடுத்தார். அதன்பின்னர் பிரேத பரிசோதனை கூடத்திற்கு சென்று அங்கு கூடியிருந்த இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

 

மேலும் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என்றும், இதற்கான அறிவிப்பை முதல்வர் அறிவிப்பார் என்றும் ஆறுதல் கூறினார்.

 

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதுடன், அவர்களுடன் பக்கபலமாக இருந்து அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை நாங்கள் செய்து தருவோம். விபத்தை தவிர்க்கும் வகையில் குமுளி மலைச்சாலையில் சீரமைப்பு பணிகள் செய்யப்படும் என்றார்.

CATEGORIES
TAGS